முகப்பு |
மடவது அம்ம |
316. முல்லை |
மடவது அம்ம, மணி நிற எழிலி- |
||
'மலரின் மௌவல் நலம் வரக் காட்டி, |
||
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின் |
||
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்' என, |
||
5 |
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் |
|
நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசை |
||
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக் |
||
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, |
||
தளி தரு தண் கார் தலைஇ, |
||
10 |
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே. | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-இடைக்காடனார்
|