முகப்பு |
மணிக் குரல் |
293. பாலை |
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி, |
||
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன் |
||
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து, |
||
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப் |
||
5 |
பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், |
|
பெரு விதுப்புறுகமாதோ-எம் இற் |
||
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ, |
||
கொண்டு உடன் போக வலித்த |
||
வன்கண் காளையை ஈன்ற தாயே. | உரை | |
தாய் மனை மருண்டு சொல்லியது; அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்
|