முகப்பு |
மணி கண்டன்ன |
221. முல்லை |
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை |
||
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய, |
||
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க் |
||
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க, |
||
5 |
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், |
|
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ, |
||
செல்க-பாக!-நின் செய்வினை நெடுந் தேர்: |
||
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள், |
||
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க, |
||
10 |
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் |
|
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி, |
||
'வந்தீக, எந்தை!' என்னும் |
||
அம் தீம் கிளவி கேட்கம் நாமே. | உரை | |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்
|