முகப்பு |
மணி துணிந்தன்ன |
159. நெய்தல் |
மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின் |
||
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை, |
||
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை, |
||
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி, |
||
5 |
எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல |
|
வளி சீத்து வரித்த புன்னை முன்றில், |
||
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய, |
||
'எழு' எனின், அவளும் ஒல்லாள்; யாமும், |
||
'ஒழி' என அல்லம் ஆயினம்; யாமத்து, |
||
10 |
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற் |
|
சில் குடிப் பாக்கம் கல்லென |
||
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே! | உரை | |
தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி, வரைவு கடாயது.-கண்ணம்புல்லனார்
|