முகப்பு |
மரம் தலை மணந்த |
394. முல்லை |
மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து, |
||
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை, |
||
பொன் செய் கொல்லனின், இனிய தெளிர்ப்ப, |
||
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர், |
||
5 |
வன் பரல் முரம்பின், நேமி அதிர, |
|
சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே; |
||
இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின் |
||
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு |
||
நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே? | உரை | |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது;வன்சொல்லால் குறை நயப்பித்த தோழி தந்து அளித்ததூஉம் ஆம்.-ஒளவையார்
|