முகப்பு |
மலை அயற் கலித்த |
108. குறிஞ்சி |
மலை அயற் கலித்த மை ஆர் ஏனல் |
||
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை |
||
அணையக் கண்ட அம் குடிக் குறவர், |
||
கணையர், கிணையர், கை புனை கவணர், |
||
5 |
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! |
|
பழகிய பகையும் பிரிவு இன்னாதே; |
||
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை |
||
சுடர் புரை திரு நுதல் பசப்ப, |
||
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே! | உரை | |
வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.
|