முகப்பு |
மலை இடம் படுத்துக் |
209. குறிஞ்சி |
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத் |
||
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் |
||
சில வித்து அகல இட்டென, பல விளைந்து, |
||
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள், |
||
5 |
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல் |
|
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே |
||
படும்கால் பையுள் தீரும்; படாஅது |
||
தவிரும்காலைஆயின், என் |
||
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே! | உரை | |
குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன்.-நொச்சி நியமங்கிழார்
|