முகப்பு |
மலை கண்டன்ன |
60. மருதம் |
மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின் |
||
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ! |
||
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல், |
||
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு |
||
5 |
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு |
|
கவர் படு கையை கழும மாந்தி, |
||
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின் |
||
நடுநரொடு சேறிஆயின், அவண் |
||
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில் |
||
10 |
மா இருங் கூந்தல் மடந்தை |
|
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே. | உரை | |
சிறைப்புறமாக உழவர்க்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பு அறிவுறீஇயது.-தூங்கலோரியார்
|