முகப்பு |
மாயோன் அன்ன |
32. குறிஞ்சி |
'மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன், |
||
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி |
||
அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும் |
||
வருந்தினன்' என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்; |
||
5 |
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, |
|
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு |
||
அரிய-வாழி, தோழி!-பெரியோர் |
||
நாடி நட்பின் அல்லது, |
||
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே. | உரை | |
தலைவிக்குக் குறை நயப்புக் கூறியது.- கபிலர்
|