முகப்பு |
மிளகு பெய்தனைய |
66. பாலை |
மிளகு பெய்தனைய சுவைய புன் காய் |
||
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட |
||
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன் |
||
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி, |
||
5 |
புன் புறா உயவும் வெந் துகள் இயவின், |
|
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும், |
||
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ- |
||
கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும், |
||
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும், |
||
10 |
மாண் நலம் கையறக் கலுழும் என் |
|
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே? | உரை | |
மனை மருட்சி.-இனிசந்த நாகனார்
|