முகப்பு |
முரிந்த சிலம்பின் |
295. நெய்தல் |
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின், |
||
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல் |
||
ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள், |
||
அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை, |
||
5 |
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த, |
|
பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை, |
||
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன, எம் |
||
இள நலம் இற்கடை ஒழியச் |
||
சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே. | உரை | |
தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; சிறைப்புறமும் ஆம்.- ஒளவையார்
|