முகப்பு |
முழங்கு திரை... நுணங்கு |
15. நெய்தல் |
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர், |
||
நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள |
||
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப! |
||
பூவின் அன்ன நலம் புதிது உண்டு, |
||
5 |
நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமே |
|
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி, |
||
மாசு இல் கற்பின் மடவோள் குழவி |
||
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு, |
||
சேணும் எம்மொடு வந்த |
||
10 |
நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே! | உரை |
வரைவு நீட்டித்தவழி, தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது.-அறிவுடைநம்பி
|