முகப்பு |
முழவு முகம் புலர்ந்து |
360. மருதம் |
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய |
||
விழவு ஒழி களத்த பாவை போல, |
||
நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வௌவி, |
||
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர், |
||
5 |
சென்றீ-பெரும!-சிறக்க, நின் பரத்தை! |
|
பல்லோர் பழித்தல் நாணி, வல்லே |
||
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப, |
||
கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும் |
||
முனியுடைக் கவளம் போல, நனி பெரிது |
||
10 |
உற்ற நின் விழுமம் உவப்பென்; |
|
மற்றும் கூடும், மனை மடி துயிலே. | உரை | |
பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; தலைமகள் ஊடிச் சொல்லியதூஉம் ஆம்.-ஓரம்போகியார்
|