முகப்பு |
முன்னியது முடித்தனம் |
169. முல்லை |
'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்! |
||
வருவம்' என்னும் பருவரல் தீர, |
||
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி- |
||
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி |
||
5 |
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை |
|
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும் |
||
வன் கை இடையன் எல்லிப் பரீஇ, |
||
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை |
||
மறுகுடன் கமழும் மாலை, |
||
10 |
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே. | உரை |
வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.
|