| முகப்பு | 
| 
யார்க்கு நொந்து | 
| 
211. நெய்தல் | 
| 
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-ஊர் கடல் | ||
| 
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில், | ||
| 
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த | ||
| 
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய | ||
| 
5 | 
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, | |
| 
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத் | ||
| 
துறு கடற் தலைய தோடு பொதி தாழை | ||
| 
வண்டு படு வான் போது வெரூஉம் | ||
| 
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே? | உரை | |
| 
வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.-கோட்டியூர் நல்லந்தையார்
 |