முகப்பு |
யார்க்கு நொந்து |
211. நெய்தல் |
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-ஊர் கடல் |
||
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில், |
||
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த |
||
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய |
||
5 |
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, |
|
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத் |
||
துறு கடற் தலைய தோடு பொதி தாழை |
||
வண்டு படு வான் போது வெரூஉம் |
||
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே? | உரை | |
வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.-கோட்டியூர் நல்லந்தையார்
|