முகப்பு |
கடம்பமரம் (கடம்பு) |
34. குறிஞ்சி |
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த |
||
பறியாக் குவளை மலரொடு காந்தள் |
||
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி, |
||
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள் |
||
5 |
அருவி இன் இயத்து ஆடும் நாடன் |
|
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் |
||
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து, |
||
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி, |
||
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்! |
||
10 |
கடவுள் ஆயினும் ஆக, |
|
மடவை மன்ற, வாழிய முருகே! |
உரை | |
தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது.-பிரமசாரி
|