முகப்பு |
காயா |
242. முல்லை |
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப, |
||
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ, |
||
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப் |
||
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல, |
||
5 |
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து |
|
செல்க-பாக!-நின் தேரே: உவக்காண்- |
||
கழிப் பெயர் களரில் போகிய மட மான் |
||
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட, |
||
காமர் நெஞ்சமொடு அகலா, |
||
10 |
தேடூஉ நின்ற இரலை ஏறே. |
உரை |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.-விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
|
371. முல்லை |
காயாங் குன்றத்துக் கொன்றை போல, |
||
மா மலை விடர் அகம் விளங்க மின்னி, |
||
மாயோள் இருந்த தேஎம் நோக்கி, |
||
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய், |
||
5 |
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்: |
|
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி, |
||
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர், |
||
குழல் தொடங்கினரே கோவலர்- |
||
தழங்கு குரல் உருமின் கங்குலானே. |
உரை | |
வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது.-ஒளவையார்
|