முகப்பு |
குமிழம் (குமிழ்) |
6. குறிஞ்சி |
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால் |
||
நார் உரித்தன்ன மதன் இல் மாமை, |
||
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண், |
||
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு |
||
5 |
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, |
|
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது, |
||
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி |
||
எறி மட மாற்கு வல்சி ஆகும் |
||
வல் வில் ஓரி கானம் நாறி, |
||
10 |
இரும் பல் ஒலிவரும் கூந்தல் |
|
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே. |
உரை | |
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்
|
274. பாலை |
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ, |
||
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து, |
||
உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள் |
||
பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம் |
||
5 |
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம், |
|
'எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?' எனக் |
||
கூறின்றும் உடையரோ மற்றே-வேறுபட்டு |
||
இரும் புலி வழங்கும் சோலை, |
||
பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே? |
உரை | |
தோழி பருவம் மாறுபட்டது.-காவன் முல்லைப் பூதனார்
|