முகப்பு |
மரா |
20. மருதம் |
ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி, |
||
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த் |
||
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் |
||
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர, |
||
5 |
செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில், |
|
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி, |
||
சென்றனள்-வாழிய, மடந்தை!-நுண் பல் |
||
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்; |
||
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை, |
||
10 |
பழம் பிணி வைகிய தோள் இணைக் |
|
குழைந்த கோதை, கொடி முயங்கலளே. |
உரை | |
பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைவி சொல்லியது; வாயிலாகப் புக்க தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-ஓரம்போகியார்
|
148. பாலை |
வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும், |
||
'நீ அவண் வருதல் ஆற்றாய்' எனத் தாம் |
||
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே, |
||
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை, |
||
5 |
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி, |
|
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது, |
||
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின் |
||
இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து, |
||
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை |
||
10 |
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் |
|
அருஞ் சுரம் இறப்ப என்ப; |
||
வருந்தேன்-தோழி!-வாய்க்க, அவர் செலவே! |
உரை | |
பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது.-கள்ளம்பாளனார்
|