முகப்பு |
மருதம் (மருது) |
330. மருதம் |
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து, |
||
மட நடை நாரைப் பல் இனம் இரிய, |
||
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து, |
||
நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை |
||
5 |
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் |
|
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை |
||
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம் |
||
புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும், |
||
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, |
||
10 |
நன்றி சான்ற கற்பொடு |
|
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே. |
உரை | |
தோழி, தலைமகனை வாயில் மறுத்தது.-ஆலங்குடி வங்கனார்
|
350. மருதம் |
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ, |
||
பழனப் பல் புள் இரிய, கழனி |
||
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும் |
||
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என் |
||
5 |
தொல் கவின் தொலையினும் தொலைக! சார |
|
விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக் |
||
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை |
||
சாடிய சாந்தினை; வாடிய கோதையை; |
||
ஆசு இல் கலம் தழீஇயற்று; |
||
10 |
வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே! |
உரை |
தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.-பரணர்
|