முகப்பு |
எருக்கு |
152. நெய்தல் |
மடலே காமம் தந்தது; அலரே |
||
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே; |
||
இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர, |
||
புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்; |
||
5 |
எல்லாம் தந்ததன்தலையும் பையென |
|
வடந்தை துவலை தூவ, குடம்பைப் |
||
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ, |
||
கங்குலும் கையறவு தந்தன்று; |
||
யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே? | உரை | |
மடல் வலித்த தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-ஆலம்பேரி சாத்தனார்
|
220. குறிஞ்சி |
சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ, |
||
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி, |
||
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன் |
||
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள், |
||
5 |
பெரிதும் சான்றோர்மன்ற-விசிபிணி |
|
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண், |
||
'ஊரேம்' என்னும் இப் பேர் ஏமுறுநர் |
||
தாமே ஒப்புரவு அறியின், 'தேமொழிக் |
||
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு |
||
10 |
அயலோர் ஆகல்' என்று எம்மொடு படலே! | உரை |
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம் ஆம்.தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம்.-குண்டுகட்பாலியாதனார்
|