முகப்பு |
இருப்பைப் பழம் |
279. பாலை |
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத் |
||
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ, |
||
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும், |
||
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப, |
||
5 |
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு |
|
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப, |
||
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை |
||
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து, |
||
அதர் உழந்து அசையினகொல்லோ-ததர்வாய்ச் |
||
10 |
சிலம்பு கழீஇய செல்வம் |
|
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே? | உரை | |
மகட் போக்கிய தாய் சொல்லியது.-கயமனார்
|