முகப்பு |
நரி |
164. பாலை |
'உறை துறந்திருந்த புறவில், தனாது |
||
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக, |
||
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச் |
||
சென்றனர் ஆயினும், நன்று செய்தனர்' எனச் |
||
5 |
சொல்லின் தெளிப்பவும், தெளிதல் செல்லாய்- |
|
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர் |
||
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென, |
||
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ, |
||
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது |
||
10 |
மாறு புறக்கொடுக்கும் அத்தம், |
|
ஊறு இலராகுதல் உள்ளாமாறே. | உரை | |
பொருள் முடித்து வந்தான் என்பது, வாயில்கள்வாய்க் கேட்ட தோழி தலைவிக்குஉரைத்தது.
|
352. பாலை |
இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய |
||
அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன் |
||
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை, |
||
அழல் போல் செவிய சேவல் ஆட்டி, |
||
5 |
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி |
|
பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று, |
||
தேர் திகழ் வறும் புலம் துழைஇ, நீர் நயந்து, |
||
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ |
||
அருஞ் சுரக் கவலை வருதலின், வருந்திய |
||
10 |
நமக்கும் அரிய ஆயின: அமைத் தோள் |
|
மாண்புடைக் குறுமகள் நீங்கி, |
||
யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே! | உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது.-மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
|