முகப்பு |
ஆதிமந்தியார் |
31. மருதம் |
மள்ளர் குழீஇய விழவினானும், |
||
மகளிர் தழீஇய துணங்கையானும், |
||
யாண்டும் காணேன், மாண் தக்கோனை; |
||
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக் |
||
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த |
||
பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே. |
உரை | |
நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தோடு நின்றது. - ஆதிமந்தி |