முகப்பு |
இளங்கீரந்தையார் |
148. முல்லை |
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த |
||
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக் |
||
காசின் அன்ன போது ஈன் கொன்றை |
||
குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும், |
||
'கார் அன்று' என்றிஆயின், |
||
கனவோ மற்று இது? வினவுவல் யானே. |
உரை | |
பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்த, தலைமகள் சொல்லியது. - இளங்கீரந்தையார். |