முகப்பு |
கணக்காயன் தத்தன் |
304. நெய்தல் |
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி |
||
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ் |
||
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக் |
||
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, |
||
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து |
||
வெண் தோடு இரியும் வீ ததை கானல், |
||
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு |
||
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே. |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கணக்காயன் தத்தன் |