முகப்பு |
குடவாயிற் கீரனக்கன் |
79. பாலை |
கான யானை தோல் நயந்து உண்ட |
||
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை |
||
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப் |
||
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும் |
||
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச் |
||
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு |
||
ஒல்லேம் என்ற தப்பற்குச் |
||
சொல்லாது ஏகல் வல்லுவோரே. |
உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- குடவாயிற் கீரனக்கன் |