முகப்பு |
குழல் தத்தன் |
242. முல்லை |
கானங்கோழிக் கவர் குரற் சேவல் |
||
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப் |
||
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் |
||
சீறூரோளே, மடந்தை; வேறு ஊர் |
||
வேந்து விடு தொழிலொடு செலினும், |
||
சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே. |
உரை | |
கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.- குழற்றத்தன் |