முகப்பு |
குறியிறையார் |
394. குறிஞ்சி |
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி |
||
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற |
||
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி, |
||
முன் நாள் இனியது ஆகி, பின் நாள் |
||
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு, |
||
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே. |
உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது. - குறியிறையார் |