முகப்பு |
பெரும்பாக்கன் |
296. நெய்தல் |
அம்ம வாழி-தோழி!-புன்னை |
||
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை |
||
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில் |
||
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் |
||
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று, |
||
கடிய கழறல் ஓம்புமதி-'தொடியோள் |
||
இன்னள் ஆகத் துறத்தல் |
||
நும்மின் தகுமோ?' என்றனை துணிந்தே. |
உரை | |
காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பெரும்பாக்கன் |