முகப்பு |
மதுரை ஈழத்துப் பூதன் தேவன் |
189. பாலை |
இன்றே சென்று வருதும்; நாளைக் |
||
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக, |
||
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி |
||
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப, |
||
கால் இயல் செலவின், மாலை எய்தி, |
||
சில் நிரை வால் வளைக் குறுமகள் |
||
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே. |
உரை | |
வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன். |
360. குறிஞ்சி |
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து |
||
அறியான் ஆகுதல் அன்னை காணிய, |
||
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும், |
||
வாரற்கதில்ல-தோழி!-சாரல் |
||
பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல் |
||
உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே |
||
சிலம்பின் சிலம்பும் சோலை |
||
இலங்கு மலை நாடன் இரவினானே. |
உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன் |