முகப்பு |
மதுரைச் சீத்தலைச்சாத்தனார் |
154. பாலை |
யாங்கு அறிந்தனர்கொல்- தோழி! - பாம்பின் |
||
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து, |
||
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி, |
||
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை |
||
பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத் |
||
தயங்க இருந்து, புலம்பக் கூஉம் |
||
அருஞ் சுர வைப்பின் கானம் |
||
பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே? |
உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு உரைத்தது.- மதுரைச் சீத்தலைச் சாத்தன் |