வெண்கொற்றன்

86. குறிஞ்சி
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து,
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.

உரை

'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - வெண்கொற்றன்