முகப்பு |
வெண்மணிப்பூதி |
299. நெய்தல் |
இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப் |
||
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல், |
||
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல், |
||
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற் |
||
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல் |
||
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன் |
||
மணப்பின் மாண்நலம் எய்தி, |
||
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே? |
உரை | |
சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெண்மணிப் பூதி |