யாய் ஆகியளே விழவு

10. மருதம்
யாய் ஆகியளே விழவு முதலாட்டி;
பயறு போல் இணர பைந் தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள் ஆகலின், நாணிய வருமே.

உரை

தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - ஓரம்போகியர்