முகப்பு |
யார் அணங்குற்றனை |
163.நெய்தல் |
யார் அணங்குற்றனை-கடலே! பூழியர் |
||
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன |
||
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை. |
||
வெள் வீத் தாழை திரை அலை |
||
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே? | உரை | |
தன்னுள் கையாறு எய்திடு கிளவி - அம்மூவன் |