முகப்பு |
வார் உறு வணர் கதுப்பு |
82. குறிஞ்சி |
வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு, |
||
'அழாஅல்' என்று நம் அழுத கண் துடைப்பார்; |
||
யார் ஆகுவர் கொல்?-தோழி!-சாரல் |
||
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால் |
||
கொழுங் கொடி அவரை பூக்கும் |
||
அரும் பனி அற்சிரம் வாராதோரே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் 'வருவர்' என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - கடுவன் மள்ளன் |