முகப்பு |
வாரல் எம்சேரி |
258. மருதம் |
வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே; |
||
அலராகின்றால்-பெரும!-காவிரிப் |
||
பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த |
||
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, |
||
அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை |
||
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், |
||
அழிசி ஆர்க்காடு அன்ன இவள் |
||
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே. | உரை | |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம். ஆம். - பரணர் |