முகப்பு |
வாரார் ஆயினும் வரினும் |
110. முல்லை |
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு |
||
யார் ஆகியரோ-தோழி!-நீர |
||
நீலப் பைம் போது உளரி, புதல |
||
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி, |
||
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த |
||
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று |
||
இன்னாது எறிதரும் வாடையொடு |
||
என் ஆயினள்கொல் என்னாதோரே? | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது; தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம். - கிள்ளிமங்கலங் கிழார் |