விட்ட குதிரை விசைப்பின்

74. குறிஞ்சி
விட்ட குதிரை விசைப்பின் அன்ன,
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே.

உரை

தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது. - விட்ட குதிரையார்