முகப்பு |
விடர் முகை அடுக்கத்து |
218.பாலை |
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக் |
||
கடனும் பூணாம்; கைந் நூல் யாவாம்; |
||
புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்; |
||
உள்ளலும் உள்ளாம் அன்றே-தோழி!- |
||
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று |
||
இமைப்பு வரை அமையா நம் வயின் |
||
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே. | உரை | |
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கொற்றன் |