வினையே ஆடவர்க்கு

135. பாலை
'வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' என,
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல்-தோழி!-அழுங்குவர் செலவே.

உரை

'தலைமகன் பிரியும்' என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ.