முகப்பு |
சேறிரோ எனச் செப்பலும் |
268. நெய்தல் |
'சேறிரோ?' எனச் செப்பலும் ஆற்றாம்; |
||
'வருவிரோ? என வினவலும் வினவாம்; |
||
யாங்குச் செய்வாம்கொல்?-தோழி!-பாம்பின் |
||
பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு |
||
நடு நாள் என்னார், வந்து, |
||
நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே. |
உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.- கருவூர்ச் சேரமான் சாத்தன் |