முகப்பு |
தீண்டலும் இயைவது கொல்லோ |
272. குறிஞ்சி |
தீண்டலும் இயைவதுகொல்லோ-மாண்ட |
||
வில்லுடை வீளையர் கல் இடுபு எடுத்த |
||
நனந் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த |
||
புன்கண் மட மான் நேர்பட, தன்னையர் |
||
சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக் |
||
குருதியொடு பறித்த செங் கோல் வாளி |
||
மாறு கொண்டன்ன உண்கண், |
||
நாறு இருங் கூந்தல், கொடிச்சி தோளே! | உரை | |
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஒரு சிறைப் பெரியன் |