முகப்பு |
நசை நன்கு உடையர் |
213. பாலை |
நசை நன்கு உடையர்-தோழி!-ஞெரேரெனக் |
||
கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப் |
||
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல் |
||
ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின் |
||
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி, |
||
நின்று வெயில் கழிக்கும் என்ப-நம் |
||
இன் துயில் முனிநர் சென்ற ஆறே. | உரை | |
'நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. - கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன் |