முகப்பு |
நல் உரை இகந்து |
29. குறிஞ்சி |
நல் உரை இகந்து, புல் உரை தாஅய், |
||
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல |
||
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி, |
||
அரிது அவாவுற்றனை-நெஞ்சே!-நன்றும் |
||
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு |
||
மகவுடை மந்தி போல |
||
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. | உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், 'இவர் எம்மை மறுத்தார்' என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது. - ஒளவையார் |