முகப்பு |
நல்கின் வாழும் |
327. குறிஞ்சி |
'நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின் |
||
நயன் இலர் ஆகுதல் நன்று' என உணர்ந்த |
||
குன்ற நாடன்தன்னினும், நன்றும் |
||
நின் நிலை கொடிதால்-தீம் கலுழ் உந்தி! |
||
நம் மனை மட மகள், 'இன்ன மென்மைச் |
||
சாயலள்; அளியள்' என்னாய், |
||
வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே. | உரை | |
கிழவன் கேட்கும் அண்மையனாக, அவன் மலையினின்றும் வரும் யாற்றொடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |