முகப்பு |
நல் நலம் தொலைய |
93. மருதம் |
நல் நலம் தொலைய, நலம் மிகச் சாஅய், |
||
இன் உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு |
||
அன்னையும் அத்தனும் அல்லரோ? |
||
புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே? | உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லையார் |