முகப்பு |
நலத்தகைப் புலைத்தி |
330. மருதம் |
நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத் |
||
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட |
||
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும் |
||
பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ |
||
இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும் |
||
புன்கண் மாலையும், புலம்பும், |
||
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே? | உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றியன் |