முகப்பு |
நறை அகில் வயங்கிய |
339. குறிஞ்சி |
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை |
||
உறை அறு மையின் போகி, சாரல் |
||
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன் |
||
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல் |
||
இனிதுமன் வாழி-தோழி!-மா இதழ்க் |
||
குவளை உண்கண் கலுழப் |
||
பசலை ஆகா ஊங்கலங்கடையே. | உரை | |
வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ் சொல்லி வற்புறீஇயது. - பேயார் |